Published on 13 May 2026
காடு களைந்தோம் - நல்ல கழனி
திருத்தியும் உழவுபுரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு நாற்றிசை
வீதிகள் தோற்றவும் செய்தோம் !
வீடுகள் கண்டோம் - அங்கு வேண்டிய
பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்!
பாடுகள் பட்டோம் - புவி
பசிதீர உழைத்தோம் !