Published on 06 Jun 2026
இவ்வளவு நாட்கள் என்னுடைய இனத்திற்காகாவும் மொழிக்காகவும் போராடி இவ்வளவு தூரம் இந்த புரட்சி படையை வளர்த்து மேன்மையடைய செய்த என் அண்ணனுக்கும், அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்
------
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.
------
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
இந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டு விடுதல் வேண்டும்.
(சில கட்சிகள் நடந்து முடிந்த தேர்தலில், தலைமை முழுவதும் மற்றவர்களை நம்பியதால்தான் சிலர் தோல்வியை தழுவினர். இன்னும் சொல்லப்போனால் எல்லா கட்சிகளும் கோட்டைவிட்டார்கள்.)
-------
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
அண்ணன் எப்போதும் ஓய்வில் இருப்பதில்லை, அண்ணனுடன் அத்தலைவர்கள் கலந்தாலோசித்து வழிநடத்துவார்கள்.
-------
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
நாடாளும் தலைவருடைய தொடர்பு இயல்பாக வந்து கிடைத்த காலத்திலும், சோம்பல் உடையவர்கள், அதனால் எந்தவிதமான சிறந்த பயனையும் அடைவதில்லை
( நமக்குத்தான் நம்ம அண்ணன் பதவி கொடுத்துவிட்டாரே, என்று ஒரு அலட்சியம் கொள்ளாமல், ஒரு பெயரை அடைவதற்கு/வாங்குவதற்கு எவ்வளவு கடினமாக உழைத்தோமோ, அதைவிட மிகக்கடினமாக உழைக்கவேண்டும் அந்த நற்பெயரை தக்கவைத்துக்கொள்ள. நமது இலக்கு தமிழ் தேசியத்தை மலரச்செய்வதுதான். )
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்பவர் ஆவார்கள்.
(நாம் இடைவிடாது, உழைப்பையும்/ முயற்சியையும் செலுத்துவோமானால், நம்மை சுற்றியுள்ள சதிகளை தலைதெறிக்க ஓடவிட முடியும்.)
-------
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
எவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும்.
வாதத்தை சொல்லும் பொழுது எதிரியை
உருவாக்காமல் சொல்லும் கலைதான்
நுண்ணறிவு
-----ஐசக் நியூட்டன்
(எனக்கு அரசியல் புதிது, இருப்பினும் நான் ஒரு பொது மக்களாக இருந்து பார்க்கும்போது, நம்முடைய மதிப்பிற்கும் மேன்மைக்கும் உரிய சேனாதிபதிகள் பேசும் சில சொற்கள், இக்காலத்தில் இயல்பாக இருந்தாலும் கூட, அவை நம்மிடம் இல்லாமல் இருப்பதே சிறப்பான பண்பாக நான் கருதுகிறேன். இது யாரையும் புண்படுத்துவது என்பது எனது நோக்கமல்ல, sorry please )
ஏன்னா ஒரு பொண்ணு சமூக வலைத்தளத்தில் பேசியிருப்பார்கள்........ குறைகூறும் அந்த பெண்ணுடைய வாக்கு நமக்கு வேண்டாம், இருப்பினும் அதையும் நான் இழக்க தயாராக இல்லை, என் அன்பு சொந்தங்களுக்கும் அந்த எண்ணம் இருக்காது என்பதை நம்புகிறேன்.
அனைத்து தரப்பினரையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். சில வார்த்தைகள் வீர மறவர்களுக்கு பிடிக்கும், ஆனால் பெண்மைக்கு இனிமையான சொற்களே பிடிக்கும். so, lets we speak pleasant words. இங்கு இருக்கும் அனைவரும் என்னை விட வயதில் மூத்தவர்களும் இருப்பார்கள், இளையவர்களும் இருப்பார்கள், நான் சொல்வதை குறையாக கருதவேண்டாம். சரியாக இருந்தால் மாற்றிக்கொள்வோம்....
அதனையே தான் வள்ளுவர் சொல்கிறார்....
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
இப்போது எப்படி நமது மக்கள் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசும் வார்த்தைகளை உற்று நோக்குகிறார்களோ, அதுபோன்று நம்மையும் நோக்குவார்கள். முதலமைச்சர் அவர்கள் கூட "நல்லா வாயில வருது" "மற்றும் பல" "அல்லு சில்லு" "நான் என்ன ....." அவைகளே அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள், யாரால் வளர்க்கப்பட்டார்கள் என்பதை காட்டுகிறது. ஒரு படை சேனாதிபதி செய்யும் சில தவறுகளால் அந்த அரசனுக்கே தவறான பெயரை உருவாகும். ஆகவே நம் களப்பணியாளர்கள் இனிமையான சொற்களை பேசுவதும், கண்ணியமுடன் நடந்துகொள்ளவும் வேண்டும்.)
அதைத்தான் வள்ளுவரும் சொல்கிறார்....
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும்; அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச்சொற்கள் எடுத்துக் காட்டும்.
-------
"நல்லதை நினைவுபடுத்திக்
கொண்டேயிருக்க வேண்டியுள்ளது.
கெட்டது தானே ஒட்டிக்கொண்டுவிடுகிறது "
(நம்முடைய தேர்தல் முத்திரையை மேடைகளில் அடிக்கடி நினைவு படுத்தும் வகையில் பேச வேண்டும்)
"மக்கள் ஒருபோதும் அறிவு தலைமையை தேடமாட்டார்கள், கவர்ச்சியை நோக்கித்தான் ஓடுவார்கள். கவர்ச்சியால் உருவாக்கப்பட்ட சமூகம், ஒருபோதும் அறிவு சமூகத்தை படைக்காது" ஹிட்லர் சொல்லியிருந்தாலும், அதை அண்ணன் சொன்னதால்தான் எனக்கு அது தெரியவந்தது, அந்த பெருமை அண்ணனை சாரும்.
--------
பயிற்சி இல்லாத அறிவு
பயனற்றது.
அறிவு இல்லாத பயிற்சி
ஆபத்தானது.
பயிற்சி இல்லாத அறிவு
பயனற்றது. (அரசியல் அனுபவம் இல்லாத ஆட்சி பாயனற்றது )
அறிவு இல்லாத பயிற்சி
ஆபத்தானது. (நல்லது கெட்டது என்று பகுத்து அறியமுடியாத சிலரால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி ஆபத்தானது.)
(ஆகவே நம்முடைய களப்பணியாளர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கவேண்டும், நமக்குள் நல்ல ஒழுக்கங்கள் நிறைந்து கிடக்கின்றன, அவை களப்பணியாளர்களிடம் சேர்க்கவேண்டும் )
------
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்.
இந்த ஆட்சி மிகப்பெரும் ஏமாற்றத்தை நம் இளைஞர்களுக்கு கொடுத்துள்ளது என்பது அறிவோம். முந்தைய ஆட்சிகளிலும் உள்ள வெறுப்பையும் வெளிக்காட்டியுள்ளது.
அண்ணன் சே.குவேரா சொல்வதை போல
விதைத்துக் கொண்டே இருப்போம்
முளைத்தால் மரம் ....இல்லையேல் உரம் ...
-------
யோசிக்காமல் எடுத்த முடிவுகள்
அனைத்தும்
யோசிக்க வைத்துக் கொண்டே
இருக்கிறது...!
அறிவாண்மை மக்கள் அனைவரும் குழந்தைகள் மீதான பாசத்தினால் தவறு செய்துவிட்டார்கள். தமிழகத்திற்கு இழப்புதான், தவறுகளை உணர்ந்த மக்களை வழிநடத்துவது நம்முடைய தலையாய கடமை.
"பெருங்கடலை அசைத்து கொண்டிருக்கிறது
மீன் குஞ்சியின் சின்ன துடுப்பு "
---அப்படி இருக்கும்போது, இந்த மேன்மையான சமுதாயத்தை நம்மால் விழித்துக்கொள்ள வைக்க முடியாதா என்ன
------
ஒரு கோமாளி
அரண்மனைக்குச் சென்றால்,
அவன்
அரசனாகி விடுவதில்லை.
அரண்மனைதான்
சர்க்கஸ் கூடாரமாகிவிடும்
--துருக்கிய பழமொழி
நம்முடைய வருங்கால அமைச்சர்களுக்கு ஒரு வேண்டுகோள்... நாம் நிர்வாகம் சமந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் நாம் அறிந்துகொண்டே வரவேண்டும்.... ஒரு வாய்ப்பு கிட்டும்போது, நமது ஆட்சியை சிறப்புற செய்யவேண்டும்... அதனை நெடுங்கால திட்டமாக கொள்ள வேண்டும்.
அதற்காகத்தான் அனைத்து விஷயங்களின்/நடப்புகளின் கிடங்காக நாம் ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளேன்.
அதையேதான் வள்ளுவர் கூறுகிறார்
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஓம் அளவுமோர் நோய்
சொந்த புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுவதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.
.....அவ்வளவு இனிமையான ஆட்சி நடைபெறுகிறது என்பதை நாம் அறிவோம். நாம் அமைக்க போகும் முதல் ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காது நம்முடைய அண்ணன் நம் கூட இருக்கும்வரை, இருப்பினும் இவ்வாறு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
நம் ஆட்சி அமையும், அப்போது 'கால அவகாசம்' என்ற இருவார்த்தையை நம் வரலாற்றில் எழுதி வைத்துவிட்டு செல்லக்கூடாது, ஆட்சிக்கு வந்த நாளன்றே அனல் பறக்கவேண்டும்.
------
குழந்தை செல்வங்களுக்கு
இளைஞர்களுக்கு
பாமர மக்களுக்கு
களப்பணியாளர்களுக்கு
இன்னும் அனுபவம் மிக்கவர்களோடு களத்தொண்டர்களோடு கலந்து ஆலோசித்தால் நிறைய திட்டங்களை அறிந்துகொள்ளமுடியும்
------
“I am indebted to my mother & father for giving me life; I am indebted to my elder brother Seeman for teaching me to protect my people.”
“வாழ்வை அளித்ததற்கு என் தந்தைக்கு நான் கடன்பட்டவன்;
என் இனம் காக்க கற்றுத்தந்த என் அண்ணன் சீமான் அவர்களுக்கு கடமை பட்டவன்.
-----
முடிவுரை (speech should end with this kural)
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
எல்லாரும் மகிழும் வகையிலே கூடியிருந்து, ‘இனி என்று மீளக் கூடுவோம்’ என்று எண்ணும்படியாகப் பிரிதல் கல்வியறிவினரது செயல் ஆகும்
வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள்
------
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார்.
அதனால் நான் அறிவில் சிறியவனாக இருந்தும் கூட, என் அண்ணனுக்கு சிலவற்றை கூற ஆசை
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
ஒருவன் சொல்வதன் முன்பாகவே, குறிப்பால் அவன் கருத்தை அறியக் கூடியவன், வற்றாத கடலால் சூழப் பெற்றுள்ள உலகத்துக்கே அணிகலன் ஆவான்
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
ஒருவரது முகக்குறிப்பினாலேயே, அவரது கருத்துக்களை உணர்கின்றவரை, உறுப்பினுள் எதனைக் கொடுத்தேனும் துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்.
ஒற்றாடல் (கட்சியினுள் இருப்பவர்களை கூறவில்லை)
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய சுற்றத்தினர், அரசனை விரும்பாத பகைவர், என்று சொல்லப்படும் அனைவரையும் ஆராய்வதே, ஒற்றரின் கடமை
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும்.
இவ்வாறு தகர்க்க முடியாத ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அந்த கட்டமைப்பின் அறிவுறுத்தலின் படி நம்முடைய சேனாதிபதிகள் இயங்க வேண்டும்.
No tags available
No related articles found