Neethineri Vilakam

Published on 13 May 2026


நீதிநெறி விளக்கம் 

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார் 
அவையஞ்சா ஆகுலச் சொல்லும்
- நவையஞ்சி 
ஈத்துணாச் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும் 
பூத்தலின் பூவாமை நன்று 

- குமரகுருபரர்

---------- 

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் 
மற்றோர் அணிகலம் வேண்டாவாம்
 - முற்ற 
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே` 
அழகுக்கு அழகு செய்வார்.
- குமரகுருபரர்

விளக்கம் 
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

 

🏷️ Tags:
Educationwealth

📰 Related Articles