Women who excel in education

Published on 27 May 2026


கல்வியில் சிறந்த பெண்கள்

  • கையிலுள்ள செல்வதைக் காட்டிலும் நிலைத்த புகழுடைய கல்விதான் ஒருவருக்கு வாழ்வின் இறுதிவரையிலும் கைகொடுக்கிறது. கல்வி பெறுதலே பெண்களுக்கு அழகு. சங்ககாலத்தில் உயர்ந்திருந்த பெண்கல்வி, இடைக்காலத்தில் ஒடுங்கிப்போனது.பெண்கல்வியை மீட்டெடுக்க உலகம் முழுவதும் சான்றோர் பலர் பாடுபட்டிருக்கின்றனர். 

சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் சிலர்

  • ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக் குயத்தியார், பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்

முத்துலெட்சுமி (1886 - 1968)

  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர். அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

பண்டித ரமாபாய் (1858 - 1922)

  • இவர் சமூகத் தன்னார்வலர். தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர் . பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர்.

மூவலூர் இராமாமிர்தம் (1883 - 1962)

  • தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி ; எழுத்தாளர்; திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர். ; தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர். தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.

ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் (1870-1960)

  • பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் , தமிழகத்திற்கு வந்து, மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.

சாவித்திரிபாய் பூலே

  • 1 8 4 8 இ ல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்டப ள் ளி யி ல் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.

மலாலா

  • பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது பன்னிரண்டு (1997).

-------------

கோத்தாரி கல்விக் குழு

  • 1964ஆம் ஆண்டு கோத்தாரிக் கல்விக் குழு தன் பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.

சாரதா சட்டம்

  • பெண் முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். எனவே, அதைத் தடுக்க 1929ஆம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் (1906 -1955)

  • தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார். சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.
🏷️ Tags:

No tags available


📰 Related Articles